மெக்ரிட்சி காட்டு மெதுவோட்டப்பாதையில் சென்ற சனிக்கிழமை மெதுவோட்டம் ஓடியபோது மயங்கி விழுந்து பிறகு மரணம் அடைந்த ராஜேந்திரன் சுப்பையா, 54, நல்ல உடல்நலத்துடன் இருந்தார் என்றும் தொழிலதிபரான அவர் ஏராளமான அறப்பணிகளில் பங்கெடுத்துக்கொண்டவர் என்றும் அவரது மனைவி தெரிவித்தார். திரு ராஜேந்திரனின் மனைவி பெருமாளம்மாள் வைரமுத்து உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இப்போது அதிர்ச்சி யில் உறைந்திருக்கிறார்கள். திரு ராஜேந்திரனுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் இதய அறுவைசிகிச்சை நடந்தது.
மெதுவோட்டக்காரர் மரணம், அதிர்ச்சியில் குடும்பத்தினர்
1 mins read

