இடம்பெயறும் பாய லேபார் விமானத் தளம்; அதிகரிக்கும் நிலப்பரப்பளவு

இடம்பெயறும் பாய லேபார் விமானத் தளம்; அதிகரிக்கும் நிலப்பரப்பளவு

1 mins read

சிங்கப்பூரின் வடகிழக்கில் அமைந்துள்ள பாய லேபார் ஆகாயப்படைத் தளம் 2030ஆம் ஆண்டு அல்லது அதன் பிறகு இடம் மாற்றப்படும் என்றும் இடமாற்றம் செய்வது சிக்கலான காரியம் என்பதால் உறுதியான கால அட்ட வணையை இப்போது சொல்ல இயலாது என்றும் தற்காப்பு இரண்டாம் அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். ஆகாயப்படைத் தளம் இடம் மாற்றம் கண்டபின், 800 ஹெக்டர் முக்கிய நிலப்பரப்பு பயன்பாட்டுக்கு கிடைக்கும். தற்போது ஆகாயப்படைத் தளம் அமைந்துள்ள நிலத்தில், அங் மோ கியோவை விட பெரிய வீடமைப்புப் பேட்டையை உருவாக்கமுடியும் என்றும் அமைச்சர் ஓங் விவரித்தார்.