பிடோக் ரிசர்வாயர் ரோட்டில் இருக்கும் புளோக் 607ன் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே ஒரு நாய் பட்டினியுடன் கிடந்தது. அதைப் பார்த்த பெஞ்சமின் லோவ், 37, என்பவர் வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்துடன் தொடர்புகொண்டார். அந்த ஆணையத்தின் அதிகாரி ஒருவர் 45 நிமிடத்தில் வந்து அந்த நாயை எடுத்துச் சென்றதாக திரு லோவ் குறிப்பிட்டார். இந்த விவகாரம் பற்றி புலன்விசாரணை நடப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கு வெளியே கவனிப்பாரின்றிக் கிடந்த நாய்
1 mins read
-

