சிங்கப்பூரில் பொது இடங்களின் துப்புரவு மனநிறைவு தரும்படி இருப்பதாக 10 பேரில் ஏறக்குறைய ஒன்பது பேர் கருதுகிறார்கள் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இருந்தாலும் வீடமைப்பு வளர்ச் சிக் கழக நகர மையங்கள் முதல் ஈரச் சந்தைகள் வரை பலதரப்பட்ட 20 பொது இடங்களைப் பொறுத்த வரையில் மக்களின் துப்புரவு மன நிறைவு மாறுபட்டதாக இருக்கிறது. சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசி களும் கலந்துகொண்ட அந்த ஆய்வில் 2,000 பேர் கருத்து தெரிவித்தனர். பொது நிகழ்ச்சி களுக்குப் பிறகு அங்காடி நிலை யங்களின் துப்புரவுநிலை அவ் வளவாக சரியில்லை என்று குடி யிருப்பாளர்கள் கூறுகிறார்கள். பொதுச் சுகாதார மனநிறைவு ஆய்வு சென்ற ஆண்டு பிற்பகுதி யிலிருந்து இந்த ஆண்டு மார்ச் வரை நடத்தப்பட்டது.
பொதுச் சுகாதார மனநிறைவு ஆய்வு சென்ற ஆண்டு பிற் பகுதி முதல் இந்த ஆண்டு மார்ச் வரை நடத்தப்பட்டது. அதில் 2,000 சிங்கப்பூரர் களும் நிரந்தரவாசி களும் கருத்து தெரிவித் தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

