காவடி தூக்கும் பக்தர்களுக்கு விளக்கக் கூட்டங்கள்

காவடி தூக்கும் பக்தர்களுக்கு விளக்கக் கூட்டங்கள்

1 mins read

இம்மாதம் 31ஆம் தேதி தைப்பூசத் தினத்தன்று காவடி தூக்கும் பக்தர்களுக்காக சிறப்பான இரு விளக்கக்கூட்டங் கள் நடைபெறும். முதலாவது கூட்டம் வரும் 4ஆம் தேதி வியாழக்கிழமையும் இரண்டாவது கூட்டம் 6ஆம் தேதி சனிக்கிழமையும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பிஜிபி திருமணத்தில் இடம்பெறும். தைப்பூசத் தினத்தன்று சந்திர கிரகணமும் இடம்பெறவி ருப்பதால், காவடி தூக்கும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. காவடி தூக்குபவர்கள், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் போன்றோர் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தைப்பூசம் 2018 ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொள்கிறது.