அனைத்துலக பவளப்பாறை ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சிகள்

1 mins read

அனைத்துலக பவளப்பாறை ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தேசிய பூங்கா வாரியம் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஒரு பயிலரங்கின் வழி விளக்குவது, கலந்துறவாடும் கண்காட்சிகள், சிங்கப்பூரின் கடல் சுற்றுப்புற வாழ்விடம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பது முதலான பலவும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும். ஓர் ஆண்டு முழுவதற்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. மேல் விவரங்களுக்கு www.nparks.gov.sg/iyor என்ற இணையத்தளத்தை நாடலாம்.