வடிகால் அடைப்பால் தெம்பனிசில் வெள்ளம்

1 mins read

கட்டுமான நிறுவனம் ஒன்று வடி கால் மீது தற்காலிக சாலையை ஏற்படுத்தியிருந்ததால் தெம்பனி சில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தெம்பனிஸ் அவென்யூ 12க்கு அருகே அமைக்கப்பட்ட சாலையால் ஜன வரி 8ஆம் தேதி மழை நீர் வடிகாலி லிருந்து வழிந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்தச் சாலையை கட்டுவதற்கு முன்பு கட்டுமான நிறுவனமான ஹுவா டியோங் முன் அனுமதி பெறவில்லை என்றும் கழகம் குறிப்பிட்டது.