சீனப் புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் காலையில் பிரதமர் லீ சியன் லூங், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனங்களின் பணிமனைக்குச் சென்றார். இந்த விழாக்காலத்தில் ரயில் துறையில் பணிபுரியும் ஊழியர் களுடன் பிரதமர் புத்தாண்டைக் கொண்டாடியதற்கான காரணத் தைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் ரயில் சேவை முடக்கம் ஏற்பட்ட நிலையில் அதன் ஊழி யர்கள் மிகக் கடினமாக வேலை செய்து வருகின்றனர் என்றும் அவர்கள் அதிகபடியான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள னர் என்றும் அவர் தெரிவித்துள் ளார். எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவ னத்தின் 'காலி பாது' எம்ஆர்டி பணிமனைக்கு முதலில் சென்ற பிரதமர் பிறகு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் துவாஸ் பணிமனைக்குச் சென்றார்.

