மரத்தில் மோதிய கனரக வாகனத்தில் சிக்கித் தவித்த ஓட்டுநர்

மரத்தில் மோதிய கனரக வாகனத்தில் சிக்கித் தவித்த ஓட்டுநர்

1 mins read
944155bb-8092-40cf-82b6-508afdb3ce2a
-

சாங்கியை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் நேற்றுக் காலை சுமார் 6 மணிக்கு மரத்தில் மோதிய கனரக வாகனத்தில் சிக்கிய 30 வயது களில் உள்ள ஓட்டுநர் சிக்கினார். தஞ்சோங் காத்தோங் சாலை வெளிவாயில் அருகே அந்த விபத்து நடந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஆடவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவினர் மீட்டனர். அவர் சாங்கி பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காலை 10 மணிக்கு சீரானது.