இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகள், உடற்குறையுள்ளோருக்கான ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரை பிரதிநிதித்து செல்லும் குழுவிற்கு ஆதரவளிக்கும் வகையில் மேலும் $2 மில்லியன் ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறை நாடாளுமன்ற செயலாளர் பே யாம் கெங் நேற்று தெரிவித்தார். இது ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியோடு கூடுதலாக வழங்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்கவிருக்கும் முக்கிய, பிரதான அனைத்துலக விளையாட்டுகளில் பங்குபெறும் குறிப்பிட்ட விளையாட்டாளர்களுக்குத் தனித்தனியே தேவைப்படும் உதவியை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும். முந்தைய விளையாட்டுகளை மறுஆய்வு செய்ததிலிருந்து இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் குழுவிற்கு $2 மில்லியன் ஊக்கத்தொகை
1 mins read

