இளையர்களை ஈடுபடுத்த புதிய அரசாங்கத் திட்டம்

இளையர்களை ஈடுபடுத்த புதிய அரசாங்கத் திட்டம்

1 mins read

தேசிய அளவில் சிங்கப்பூர் இளையர்களை ஈடுபடுத்த புதிய முயற்சி இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் காணவுள்ளது. 'இளையர் கலந்துரையாடல்' என்ற புதிய முயற்சி, இளையர்க ளின் கண்ணோட்டத்தையும் அவர் களது அக்கறைகளையும் புரிந்து கொள்ள முனைகிறது. மேலும் சமுதாயத்திற்கு பங்களிப்பது குறித்து சிந்தனைகளை உரு வாக்கி அதை அமல்படுத்துவதற்கு ஆதரவளிக்கவும் இந்தப் புதிய முயற்சி நோக்கம் கொள்கிறது என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார். கலந்துரையாடல்கள் மூலம் முக்கிய விவகாரங்கள் குறித்து இளையர்கள் மேலும் அறிந்துகொள் வார்கள் என்றும் ஒருவருக்கொரு வர் தங்களது கண்ணோட்டங்களை கேட்டு அறிந்துகொள்வர் என்றும் வேற்றுமைகளை ஏற்று சமரசம் காண்பார்கள் என்றும் அவர்க ளுக்குள் அல்லது அரசாங்கத்துடன் இணைந்து புதிய தீர்வுகளை கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்பு வதாக திருவாட்டி ஃபூ நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.