ஈஸ்டர் கொண்டாட்டம், 'இயேசு ஜீவிக்கிறார்' திருச்சபையின் ஆண்டு நிறைவு, 'பைபல்' பட்ட மளிப்பு விழா என மூன்று கொண் டாட்டங்கள் 'இயேசு ஜீவிக்கிறார்' திருச்சபையில் நேற்று கோலாக லமாக நடந்தேறியது. இயேசு மரித்து மூன்றாம் நாளில் உயிர்தெழுந்த (resurrection) நாள் ஈஸ்டர் தினமாக கொண் டாடப்படுகிறது. பெரிய வெள்ளி (Good Friday) இயேசு மரித்த நாளாக கருதப்படுகிறது.
ஹெண்டர்சன் இன்டஸ்டிரியல் பார்க்கில் அமைந்திருக்கும் இத்திருச்சபை யில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். "இந்த ஈஸ்டர் கொண்டாடத்தில் இயேசு உயிர்தெழுந்த பாடல்களை பாடுவோம், முந்தைய ஆண்டு களில் இயேசு உயிர்தெழுந்த நாடகக் காட்சிகளை அரங்கேற்றி னோம், ஈஸ்டர் சிறப்பு பிரார்த் தனை, சிறுவர்கள் நடன அங்கம் என ஒட்டுமொத்த குடும்பம் ஈடுபடும் நிகழ்வாக இந்த கொண் டாட்டங்கள் ஒவ்வோர் ஆண்டும் அமையும்," என்று தெரிவித்தார் 'இயேசு ஜீவிக்கிறார்' திருச் சபையின் போதகர் ஜோனத்தன் சுப்பையா.
ஹென்டர்சன் இன்டஸ்டிரியல் பார்க்கில் அமைந்திருக்கும் 'இயேசு ஜீவிக்கிறார்' திருச்சபையில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். படம்: ப.பாலா

