அப்பர் தாம்சன் ரோட்டில் வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த ஆடவர், சாலையின் நடுவே நாய்க்குட்டி ஒன்றை கண்டு அதனைக் காப்பாற்றினார். அவர் தமது வாகனத்திலிருந்து வெளியேறி, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த நாய்க்குட்டியைத் தூக்கிச் சாலைக்கு வெளியே விட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். வாகனம் ஒன்றுக்குள் இருந்த கண்காணிப்புக் கேமரா ஒன்றில் சம்பவம் காணொளியாகப் பதிவானது. அந்தக் காணொளி, சமூக ஊடகங்களில் இதுவரை 30,000க்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. 200 முறைக்கு மேல் அது பகிரப்பட்டுள்ளது. ஆடவரின் பரிவான செயல் குறித்து இணையவாசிகள் பலர் பாராட்டினர்.
சாலையின் நடுவே தவித்த நாயைக் காப்பாற்றிய ஆடவர்
1 mins read

