அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான உச்சநிலை மாநாடு, இரு கொரியாக்களுக்கும் இடையிலான ராணுவமற்ற பகுதியில் நடைபெறாது என்று அறிவித்திருக்கிறார். எனவே, சிங்கப்பூரில் அந்தச் சந்திப்பு நடை பெறுவதற்கான சாத்தியம் வலுவாக உள்ளதாக அண்மை தகவல்கள் கோடிகாட்டுகின்றன.
உச்சநிலை மாநாட்டுக்கான தெரிவுகள் இரண்டாகச் சுருக்கப் பட்டதாகத் திரு டிரம்ப் முன்பு தெரிவித்திருந்தார். கொரிய எல்லையில் உள்ள ராணுவமற்ற பகுதியும் சிங்கப்பூரும் அந்த இரண்டு தெரிவுகள் என அவர், நைஜீரிய அதிபர் முகமது புகாரியிடம் கூறியிருந்ததாக 'வால் ஸ்திரீட் ஜர்னல்' நாளிதழ் தெரி வித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாநாட்டை சிங்கப்பூரிலே நடத்த அமெரிக்க அதி காரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

