சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நேற்று பிற்பகலில் திடீரென ஏற்பட்ட பெரிய அளவிலான மின்சாரத் தடை யினால் ஆயிரக்கணக்கான அலு வலகங்களும் வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டன. ராஃபிள்ஸ் கீயின் சில பகுதிகள், ரோபின்சன் சாலை, ஷென்டன் வே ஆகிய இடங்களில் பிற்பகல் 2.40 மணி அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டது. அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 3,156 வாடிக்கையாளர்கள் அதனால் பாதிக்கப்பட்டனர் என்று சிங்கப்பூர் பவர் குழுமம் தெரிவித்தது.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் மின்சாரத் தடை, வாடிக்கையாளர்கள் பாதிப்பு
1 mins read
-

