யீஷூனில் வசிக்கும் குடியிருப் பாளர்கள் இனி மறுபயன் பாட்டுக்கு உகந்த பைகளைத் தேவைப்படும் போது இலவச மாகப் பெறலாம். 'பவுன்ஸ் பேக்ஸ்' எனப்படும் புதிய திட்டத்தின்வழி, மறுபயன் பாட்டுக்கு உகந்த பைகளைக் குடியிருப்பாளர்கள் குறிக்கப் பட்ட ஓர் இடத்தில் வைக்கலாம். பைகள் தேவைப்படும்போது மற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பொது மக்கள் மறுபயன் பாட்டுக்கு உகந்த பைகளைப் பயன்படுத்த இத்திட்டம் ஊக்கு விக்கிறது என்றார் 'பிளாஸ்டிக் லைட் சிங்கப்பூர்' என்ற சமூகக் குழுவைத் தொடங்கிய ஆர்த்தி கிரி, 38.
மறுபயன்பாட்டு பைகளை மாட்டி விடும் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் லூயிஸ் இங், டாக்டர் ஃபைசால் இப்ராஹிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

