கடன் வாங்கியதைக் குறிப்பதற் குச் சிவப்புச் சாயத்தால் சுவர்க ளில் கிறுக்கும் முறை மாறி இப் போது கடன் முதலைகள் குறுந் தகவல், வாட்ஸ்அப் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதாக போலிஸ் தெரிவித்துள்ளது. இவ் வாறு கடன் முதலைகளால் அதிக அளவிலான மக்களை அடைய முடிவதாகவும் போலிஸ் கூறியது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் சொத்துகளை நாசம் செய்யாமல் நிகழ்ந்த அச்சுறுத்தும் சம்பவங்கள் 17.5% அதிகரித்து 942 சம்பவங்கள் ஆனது.
சாயத்திற்குப் பதிலாக வாட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் கடன் முதலைகள்
1 mins read

