பிடோக் நார்த் அவென்யூ 4ல் எஸ்பிஎஸ் டிரான்சிட் சரக்கு வாகனம் ஒன்று நேற்று சறுக்கி கால்வாய்க்குள் விழுந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கால்வாயில் அந்த வாகனம் பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பதை இணையத்தில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் காட்டின. அந்தக் கால்வாயின் ஓரத்தில் இருந்த தடுப்புக் கம்பிகள் இதனால் சேதமடைந்தன. இந்த விபத்தில் காயம் அடைந்த 57 வயது வாகன ஓட்டுநரும் 29 வயது பயணியும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் சரக்கு வாகனம் கால்வாய்க்குள் விழுந்தது
1 mins read
-

