இயந்திரப் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததன் தொடர்பில் உற்பத்தி, கடற்துறை, கட்டுமானத் தொழில் துறைகளில் உள்ள 276 நிறு வனங்களுக்கு எதிராக மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்து உள்ளது. இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங் களில் 350 நிறுவனங்களில் பரிசோ தனை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஆறு பணி நிறுத்த உத்தரவுகள் பிறப்பித்ததுடன் $91,000 பெறுமானமுள்ள 78 அப ராதங்களையும் அமைச்சு விதித்த து. இந்தக் குறைபாடுகளில் பெரும் பாலானவற்றிலும், இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப் படவில்லை என்ற அமைச்சு, இயந்தி ரப் பழுதுபார்ப்பு, பரா மரிப்புப் பணிகளில் நிறுவனங்கள் முறை யான செயல்முறையைப் பின் பற்றத் தவறியதாகக் கூறியது.
தொழிற்சாலையில் உள்ள துளையிடும் இயந்திரத்தில் (இடது) பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படாமல் இருந்ததும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கலவையில் மூடி இல்லாததும் மனிதவள அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது. படங்கள்: மனிதவள அமைச்சு

