வேலையிடத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மூன்று மரணங்களில் ஒன்று வாகன விபத்தால் ஏற் பட்டன. வாகன விபத்துகளில் கடந்த ஆண்டு 14 பேர் உயிரி ழந்தனர். அவ்வகையில், வேலையிடத்தில் மரணங்கள் ஏற்படுவதற்கான முன்னணி காரணமாக வாகன விபத்து உள்ளது என தேசிய வளர்ச்சி, மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகமது தெரி வித்துள்ளார். துவாஸில் உள்ள 'உட்லண்ட்ஸ் டிரான்ஸ்போர்ட்' தனியார் நிறுவ னத்திற்கு நேற்று வருகை அளித்த அவர் இதனைக் கூறினார்.
'பாதுகாப்பான வேலை, பாதுகாப்பாக வாகனமோட்டுதல்' இயக்கத்தின் ஒரு பகுதியாக வாகனமோட்டுதலுக்கான பயிற்றுவிப்பாளர் சுப்பிரமணியம் கன்னையா (வலது) வேலை பாதுகாப்புப் பயிற்சி ஒன்றை நடத்துகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

