தொடக்கநிலை ஒன்றிற்கான முதற்கட்டப் பதிவில் 17 பள்ளி களில் பாதிக்கு மேலான இடங்கள் அப்பள்ளிகளில் படிக் கும் மாணவர்களின் உடன்பிறந்தோரால் நிரப்பப்பட்டன. கடல்நாக ஆண்டான 2012ல் பிறந்த அதிகமான குழந்தை கள் அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் தொடக்கப் பள்ளி ஒன்றிற்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் அண்மையில் கூறினார். அடுத்தகட்டப் பதிவான, 2-ஏ ஜூலை 4 அன்று தொடங்கும். பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், பள்ளி ஆலோசனை, நிர்வாகக் குழு ஆகியவற்றில் உறுப்பினராகவுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளை இதில் பதிவு செய்யலாம்.
17 தொடக்கப்பள்ளிகளில் பாதிக்கு மேலான இடங்கள் நிரப்பப்பட்டன
1 mins read

