பத்து ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் கள், ஆசியான் அடித்தள மாதிரி கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். நாலாவது முறையாக நடைபெறும் அந்தக் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் நடந்தேறியது. அடுத்த மூன்று நாட்களுக்கு மாணவர்கள், 20 குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஆசியான் உயர் அதிகாரிகளாக தங்களைப் பாவனைப்படுத்தி அவர்கள் வட்டாரச் சவால்கள் குறித்த கலந்துரையாடல்களிலும் சந்திப்புகளிலும் ஈடுபட்டு தீர்வுகளை ஆராய்வர்.
மாதிரி ஆசியான் கூட்டத்தில் மாணவர்கள் கற்கவுள்ள அரசதந்திரம்
1 mins read
-

