சிங்கப்பூர் வங்கிகளுக்கு வரும் காலாண்டு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட சொத்துச் சந்தையை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரிக்கும் வர்த்தக பதற்றம் போன்றவை வங்கிகளின் கடன் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் வங்கிகளின் 2018, 2019ஆம் ஆண்டுக்கான கடன் வளர்ச்சி முன்னுரைப்பை முறையே 5.0, 4.5 விழுக்காடு என்று குறைத்துள்ளதாக ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ என்ற அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் வங்கிகள் எதிர்நோக்கும் நெருக்கடி
1 mins read
-

