உடற்பிடிப்பு (மசாஜ்) கூடங்கள் நடத்தும் பத்துப் பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக நேற்று நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டனர். 37 வயதுக்கும் 71 வயதுக்கும் உட்பட்ட அவர்களில் நால்வர் பெண்கள். இவ்வாண்டு மார்ச் மாதத் திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப் பட்ட சோதனைகளில் அவர்கள் பிடிபட்டனர். உடற்பிடிப்பு நிலையங்களுக் கான சட்டம் தற்போது திருத்தப் பட்டுள்ளது. சட்டத்திருத்தம் இடம் பெறுவதற்கு முன்பு இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதி வரை உரிம மின்றி உடற்பிடிப்புக் கூடங்களை நடத்துபவர்களுக்கு அதிகபட்ச மாக $1,000 அபராதம் விதிக்கப் பட்டது. சிறைத் தண்டனை ஏதும் கிடையாது.
ஆனால், சட்டம் திருத்தப்பட்ட பின்னர் உரிமமின்றி உடற்பிடிப்புக் கூடங்களை நடத்தும் குற்றத்தில் ஈடுபட்டதாக முதல்முறை பிடிபடு வோருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப் படலாம். மீண்டும் அதே குற்றத்தைச் செய்வோரை ஐந்தாண்டு வரையில் சிறையில் அடைக்கவும் $20,000 வரை அபராதம் விதிக்கவும் இப் போது சட்டத்தில் இடமுண்டு.
நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்ட பத்து பேரில் சியூ கிம் செங், 56, என்பவரும் ஒருவர். உரிமம் தொடர்பான விதிகள் தமக்குத் தெளிவாகத் தெரிய வில்லை என்று கூறிய அவரிடம், "இனிமேலாவது கவனத்துடன் நடந்துகொள்ளுங்கள். "சட்டம் திருத்தப்பட்ட பிறகு குற்றங்கள் கடுமையாகக் கருதப் படுகின்றன," என்று அவரிடம் நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவருக்கு $3,000 அப ராதம் விதிக்கப்பட்டது. இவரைப் போல மேலும் ஆறு பேர் ஒரே மாதிரி குற்றத்தை எதிர்நோக்கினர். நேற்று ஆக அதிகமாக $8,000 அபராதம் ஜாங் சுன்ஹுவா என் னும் பெண்மணிக்கு விதிக்கப்பட் டது.