புருணையில் மாண்ட சிங்கப்பூர் ஆயுதப் படை மூன்றாம் வாரண்ட் அதிகாரியின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. முஹம்மது சாடிகின் ஹஸ் பான், 33, எனப்படும் அவர் ஹெலிகாப்டர் மீட்புத் தளத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுட்டி ருந்த குத்தகையாளர்களை மேற் பார்வையிட்டுக்கொண்டு இருந்த போது அவர் மீது மரக்கிளை ஒன்று விழுந்தது. மயங்கி விழுந்த அவரின் சுவாசத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நேற்று முன்தினம் இரவு தற்காப்பு அமைச்சு அறிக்கை மூலமாகத் தெரிவித்தது.
இச்சம்பவம் காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் அது கூறியது. உடனடியாக ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ் ஆகியவை மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் காயங்களால் உயிரிழந்ததாக முற்பகல் 11.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது. திரு ஹஸ்பான் நல்லுடல் ராணுவ விமானம் மூலம் சிங் கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டு சுவா சூ காங்கில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.