வளர்ப்புப் பெற்றோருக்கு தங்கள் சேவையைச் சிறந்த முறையில் ஆற்ற ஆதரவளிக்கும் வகையில் கூடுதலாக இரண்டு புதிய வளங் கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்வி வழிகாட்டி, கையேடு என்ற அந்த இரண்டு வளங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம், டெசன்சன் ரோட்டில் உள்ள அரசாங்கச் சேவை மன மகிழ் மன்றத்தில் நேற்று நடை பெற்ற வளர்ப்பு குடும்ப தின விருது விழாவில் வெளியிட்டார்.
சமூக சேவைக் கழகத்தின் பங்காளித்துவத்துடன் அமைச்சு கல்வி வழிகாட்டியை உருவாக்கி யது. இன்னும் அதிகமானோர் வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தில் சேர்வதால் அமைச்சு கையேடு ஒன்றையும் தயாரித்துள்ளது. "நமது வளர்ப்புப் பிள்ளைகள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும், சிறந்த எதிர்காலத்தை அடைய நல்ல கல்வித்திறனைப் பெற வேண்டும். வளர்ப்புப் பெற் றோரும் பிள்ளைகளும் தங்களுக்கு ஏற்ற கற்றல் பாணியை வகுத்துக் கொள்ள நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள கல்வி வழிகாட்டி உதவும். அத்துடன் வெளியிடப்பட்டுள்ள கையேடும் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த பராமரிப்பை அளிக்க வளர்ப்புப் பெற்றோருக்கு உதவிக் குறிப்புகளை அளிக்கும்," என்றார் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசல்.
நேற்றைய நிகழ்ச்சியில் 21 வளர்ப்புப் பிள்ளைகளுக்கு கல்வி, விளையாட்டுகள், கலைகள், நற் குண மேம்பாடு ஆகியவற்றில் செய்த சாதனைகளுக்காக விரு துகள் வழங்கப்பட்டன. வளர்ப்புப் பிள்ளையான இளை யர் ஒருவருக்கு தலைசிறந்த சாதனை விருது வழங்கி சிறப்பிக் கப்பட்டது.