ப. பாலசுப்பிரமணியம்
இந்தியர்கள் பலரும் சுகாதார விழா நிகழ்ச்சிகளுக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்கின்றனர். ஆனால் பரிசோ தனை முடிவுகளுக்கு உரிய அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க தவறுகின்றனர். இத்தகவலைச் சுகாதார மேம் பாட்டுக் கழக பிரதிநிதி ஒருவர் ஸ்ரீ நாராயண மிஷன் வளாகத்தில் நடந்த இந்திய சமூக தலைவர்கள் கருத்தரங்கில் நேற்று தெரி வித்தார்.
இந்திய சமூகத்தினர் தங்களது ஆரோக்கியத்தை நன்கு கட்டிக் காக்க ஊக்குவிக்கும் இந்தக் கருத்த ரங்கை ஸ்ரீ நாராயண மிஷன், சுகாதார மேம்பாட்டுக் கழகம், ஒருங்கிணைந்த பராமரிப்பு க்கான அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடுச் செய்திருந்தன.
ஒளியூட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தக சங்கமும் சிங்கப்பூர் பயணத்துறை கழகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தேவாலயங்கள் மன்றத்திடம் இது குறித்த புரிந்துணர்வை எட்ட மேலும் கலந்துரையாட விரும்பு வதாக குறிப்பிடப்பட்டது. இந்த ஒளியூட்டில் இருப துக்கும் அ-திகமான டிஸ்னி மற்றும் டிஸ்னி 'பிக்சார்' கேலிச் சித்திர கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இது உள்ளிட்ட பல அம்சங்கள் கிறிஸ்துவர்களுக்கும் கிறிஸ்து வர்கள் அல்லாதோருக்கும் பல தரப்பட்ட அனுபவங்களை வழங்கு வதாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கருத்தரங்கில் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம், இந்திய முஸ்லிம் பேரவை, சீக்கிய நல்வாழ்வு மன்றம், 'ஸ்மர்னா எசம்பலி', நீ சூன் சென்ட்ரல் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழு, 'கிளாப்2கேர்' ஆகி ஆறு இந்திய பங்காளி அமைப் புகள் தங்கள் சுகாதாரத் திட் டங்களையும் நடவடிக்கை களையும் பகிர்ந்துகொண்டன.
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் தற்போது 15 முதியவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் ஆலயத்தில் தயாரிக்கப்படும் உணவில் குறைந்த சர்க்கரை, உப்பு பயன் படுத்தப்படுவதாகவும் அவ்வாலயத் தொண்டூழியர் டாக்டர் இளையநாச்சி நர சிங்கன். ஆலய உணவில் தீட்டப்படாத அரிசி பயன் படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

