'மலேசியாவுடனான பிரச்சினைகளை அமைதியாக, ஆக்ககரமாக எதிர்கொள்வோம்'

1 mins read

மலேசியாவுடனான பிரச்சினை­களை "அமைதியாகவும் ஆக்க­கரமாக­வும்" சிங்கப்பூர் கையாளும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தமது புத்தாண்டுச் செய்தியில் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர், உள்ளூர் பிரச்சினைகள், தலைமைத்துவ மாற்றம் போன்­றவை குறித்து அவர் பேசினார். அனைத்துலக உறவுகள் பற்றிக் குறிப்பிடுகையில், மிகவும் அருகிலுள்ள நாடுகளுடான உறவுகளை சிங்கப்பூர் கட்டிக்­காத்து வருகிறது என்றார் அவர். இந்தோனீசியாவுடனான உறவு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புடன் ஆக்ககரமாக இருப்பதாகவும் முதலீடுகள் இருதரப்பிலும் இடம் பெற்று வருவதாகவும் திரு லீ கூறினார்.

மே மாதம் நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசியா புதிய அரசாங்கத்தை அமைத்துள்­ளது. மலேசியாவுடன் ஆக்க­பூர்வ மான பங்காளித்துவத்தைக் கட்டிக்­காப்பதில் சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது என்ற திரு லீ, இரு தரப்பின் புதிய தலைவர்களும் நல்லுறவை வளர்த்துக்கொள்வதை தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். "வரலாறு, பொருளியல், கலாசாரம், உறவுகளால் அணுக்க மாகப் பிணைக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கிடையே அவ்வப்போது ஏற்படுவதுபோல் சிங்கப்பூர்- மலேசியா இடையே அண்மையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன," என்றார் பிரதமர்.