தெம்பனிஸ் விரைவுச்சாலை-தீவு விரைவுச்சாலை சாங்கி மேம்பால சாலையைக் கட்டுவதற்கான மாற் றுக் குத்தகை ஹுவா செங் பில்டர் நிறுவனத்திற்கு $95.6 மில்லிய னுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மேம்பாலச் சாலை சென்ற ஆண்டு இடிந்துவிட்டது. நிலப்போக்குவரத்து ஆணை யம் நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களை அறிவித்தது. கட்டுமானப் பணி 2019 முத லாம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2022ஆம் ஆண்டு முற் பாதியில் அந்தச் சாலை கட்டி முடிக்கப்பட திட்டமிடப்பட்டு இருக் கிறது. அந்தச் சாலை இரண்டாண் டுக்கு முன்னதாகவே முடிக்கப் பட்டு இருக்கும் என்று தொடக்கத் தில் எதிர்பார்க்கப்பட்டது. மேம்பாலச் சாலையைக் கட்டி முடித்துத் தரவேண்டிய பொறுப்பு ஹுவா செங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் பல்வேறு சாலை கட்டுமான திட்டங்களில் அனு பவம் பெற்ற நிறுவனமாகும்.
அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டிலிருந்து சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையின் மேம்பாலம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி இடிந்து விழுந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்