'சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ்' (எஸ்பிஎச்) நிறுவனமும் சிறுவர் படையும் இணைந்து ஏற்பாடு செய்த 'ஷேர் அ கிஃப்ட்' ஆண்டிறுதி விழாவில் நேற்று சுமார் 160 வசதி குறைந்த சிறார் களுடன் அவர்களின் பராமரிப் பாளர்களும் கலந்துகொண்டனர். 'எஸ்பிஎச் நியூஸ் சென்டர்' அரங்கத்தில் பிற்பகல் நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 40 எஸ்பிஎச் ஊழியர்கள் பங்கேற்று வந்திருந்த சிறார் களுடன் தங்கள் பொழுதை இன் பமாகக் கழித்தனர். இந்நிகழ்வுக்கு எஸ்பிஎச் நிறு வனம் 13ஆவது ஆண்டாக ஆதரவு தந்து வருகிறது. குழு விளையாட்டுகள், புதையல் வேட்டை, அறுசுவை விருந்து என அரங்கமே கிறிஸ்மஸ் களை கட்டியிருந்தது.
போட்டியில் பங்கேற்க ஆவலுடன் காணப்படும் சிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்