இவ்வாண்டின் ஜிசிஇ வழக்க நிலைத் தேர்வு எழுதியோர் தங்கள் முடிவுகளை டிசம்பர் 17ஆம் தேதியன்று பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். தனியார் தேர்வு எழுதியவர்களுக்கு அஞ்சல்வழியாக முடிவுகள் அனுப் பப்படும். தேர்வுக்காக பதிவு செய்தபோது தரப்பட்ட முகவரிக்கு முடிவுகள் அனுப்பப்படும். 'சிங்பாஸ்' பயன் படுத்தியும் இவர்கள் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகத் தின் இணையத்தளம் வழியாக முடிவுகளை அறிந்திடலாம்.
இதன் தொடர்பில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயில விரும்பும் மாணவர்கள் அந்தந்தப் பள்ளியின் இணையத் தளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். முடிவுகள் வெளியிடப்பட்ட பின், மாணவர்கள் அடுத்த கட்டத் திட்டம் குறித்து ஆலோசனை பெற பள்ளி ஆசிரியர் களையும் கல்வி வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி ஆலோசகர் களையும் அணுகலாம். கல்வி, வாழ்க்கைத்தொழில் தொடர்பான பாதைகள் பற்றி அறிந்துகொள்ள 'மைஸ்கில்ஸ்ஃபியூச்சர்' இணைத்தளத்தையும் சென்று பார்க்கலாம்.