டிசம்பர் 17ஆம் தேதியன்று ஜிசிஇ வழக்க நிலைத் தேர்வு முடிவுகள்

இவ்வாண்டின் ஜிசிஇ வழக்க நிலைத் தேர்வு எழுதியோர் தங்கள் முடிவுகளை டிசம்பர் 17ஆம் தேதியன்று பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். தனியார் தேர்வு எழுதியவர்களுக்கு அஞ்சல்வழியாக முடிவுகள் அனுப் பப்படும். தேர்வுக்காக பதிவு செய்தபோது தரப்பட்ட முகவரிக்கு முடிவுகள் அனுப்பப்படும். 'சிங்பாஸ்' பயன் படுத்தியும் இவர்கள் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகத் தின் இணையத்தளம் வழியாக முடிவுகளை அறிந்திடலாம்.

இதன் தொடர்பில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயில விரும்பும் மாணவர்கள் அந்தந்தப் பள்ளியின் இணையத் தளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். முடிவுகள் வெளியிடப்பட்ட பின், மாணவர்கள் அடுத்த கட்டத் திட்டம் குறித்து ஆலோசனை பெற பள்ளி ஆசிரியர் களையும் கல்வி வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி ஆலோசகர் களையும் அணுகலாம். கல்வி, வாழ்க்கைத்தொழில் தொடர்பான பாதைகள் பற்றி அறிந்துகொள்ள 'மைஸ்கில்ஸ்ஃபியூச்சர்' இணைத்தளத்தையும் சென்று பார்க்கலாம்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!