இருவர் பலி; கனரக வாகன ஓட்டுநருக்குச் சிறை, தடை

வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலை யில் 2016 அக்டோபர் 27ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் சைக்கிளோட்டிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள். அந்தச் சம்பவம் தொடர்பில் கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றிய சகாதேவன் செங் குட்டுவன், 36, என்பவருக்கு நேற்று 12 வாரச் சிறைத்தண் டனை விதிக்கப்பட்டது. ஐந்தாண்டு காலத்திற்கு அனைத்து வகை வாகனங்களை யும் ஓட்டக்கூடாது என்று அவ ருக்குத் தடை விதிக்கப்பட்டது. சகாதேவன், சம்பவம் நிகழ்ந்த நாளில் காலை சுமார் 7.20 மணிக்கு வேலையைத் தொடங்கி ஏறக்குறைய 17 மணி நேரம் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிய நிலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் ஓட்டிவந்த வாகனம், வழியில் சைக்கிளோட்டி வந்த மூன்று பேர் மீது மோதிவிட்டது. அவர்களில் ஆங் யீ ஃபோங், 25, என்பவர் அதே இடத்தில் மாண்டுவிட்டார். ஓங் ஸி சியான், 18, என்பவர் பிறகு மருத்துவமனையில் இறந்தார். மார்க்கஸ் லோக் டெக் சூன், 19, என்பவருக்குக் காயம் ஏற்பட்டது. அலட்சியமாக வாகனத்தை ஓட்டி, இருவருக்கு மரணத்தை விளைவித்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளை சகாதேவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!