தொழிலாளர் சந்தை இந்த ஆண் டின் மூன்றாவது காலாண்டில் தொடர்ந்து மேம்பட்டது. இருந் தாலும் உலகப் பொருளியல் சூழ் நிலை நிச்சயமில்லாமல் இருப்பதால் வேலைகளில் ஆட்சேர்ப்பு நடை முறை மெதுவடையக்கூடும் என் பது பல அறிகுறிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள், கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட பூர்வாங்க மதிப் பீடுகளில் இடம்பெற்ற போக்கு களை உறுதிபடுத்துபவையாக இருக்கின்றன.
ஜூலை முதல் செப்டம்பர் வரைப்பட்ட காலாண்டில் சிங்கப் பூரில் முன்பைவிட அதிகமான மக்களுக்கு வேலை கிடைத்தது. அதே காலகட்டத்தில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைவாக இருந்தது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் வேலையின்மை விகிதம் கொஞ்சம் கூடியது. ஆட்குறைப்புக்கு ஆளாகி ஆறு மாதத்திற்குள் மறுபடியும் வேலை யில் சேர்ந்த குடிமக்கள், நிரந்தர வாசிகளின் விகிதம் 62%க்கு இறங்கியது. இந்த விகிதம் இரண் டாவது காலாண்டில் 64% ஆகும். எல்லா வயதுப் பிரிவுகளிலும் மறு வேலை நியமன விகிதம் குறைந்தே காணப்பட்டது. மூன்றா வது காலாண்டில் வேலை தேடு வோரின் எண்ணிக்கையைவிட வேலைகள் அதிகமாக இருந்தன. ஆனால் ஊழியர் சந்தை இறுக்கம் தளர்ச்சி அடைய தொடங்கியதை அடுத்து வேலை வாய்ப்புகள் குறைந்தன.