ஓசிபிசி வங்கியின் முன்னாள் வர்த்தகரான லு சோர் ஷெங், 40, என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கால கட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல், இந்த வங்கி முறை மூலம் ஏராளமான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டத்தின் கீழ் லு மீது 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருக்கின்றன. இதர இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார். அக்டோபர் தொடக்கத்தில் அவர் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் தன்னுடைய செய்கைகள் மூலம் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ஏறக்குறைய $810,000தான் என்று இப்போது அவர் வாதிடுகிறார். லு செய்த காரியங்கள் மூலம் வங்கிக்கு $3.1 மில்லியன் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக நீதிமன்ற பத்திரங்கள் மூலம் தெரியவருகிறது.
ஓசிபிசி வங்கி முன்னாள் வர்த்தகர் மீது குற்றச்சாட்டு
14 Dec 2018 09:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!