டிபிஎஸ் 'பேலா!' போன்ற மின்னிலக்க பணப்பை (மொபைல் வேலட்) வசதிகளின் அறிமுகத்தால் திறன் பேசிகள் வழி பணம் செலுத்து வோரின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதன்மூலம் சிறு வர்த்தகர்கள் அதிகம் பயனடைந்து வருகின்றனர் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் வர்த்தகப் பள்ளி மேற் கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் டிபிஎஸ் 'பேலா!' வசதி அறிமுகப் படுத்தப்பட்டபின் திறன்பேசி வழி பணம் செலுத்துவது இரட்டிப்பாகி உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குறிப்பாக, நூறு வெள்ளிக்குக் குறைவாகப் பணம் செலுத்த 'பேலா!' போன்ற மின்னி லக்கப் பணப்பை வசதியை சிங்கப் பூரர்கள் அதிகம் பயன்படுத்து கின்றனர். மின்னிலக்கப் பணப்பை வசதி களின் மூலம் நூறு வெள்ளிக்கும் குறைவாக மேற்கொள்ளப்படும் வாராந்திர பணப் பரிவர்த்தனை களின் எண்ணிக்கை 114 விழுக்காடும் நூறு வெள்ளிக்கும் மேல் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் 88 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
சிறு வர்த்தகர்களுக்கு அதிக பயனளித்து வரும் மின்னிலக்க பணப்பை வசதி
14 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!