முதியோரின், அதிலும் குறிப்பாக தனியாக வசிப்போரின் நடமாட் டத்தைக் கண்காணிப்பதில் சுகா தாரப் பராமரிப்பு நிபுணர்களுக்கு அல்லது பராமரிப்புச் சேவையாளர் களுக்கு உதவும் விவேக மிதியடி ஒன்றை நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியும் 'ஆப்ஸ்= கனெக்ட்' எனும் உள்ளூர் மின் னணுவியல் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கியுள்ளன. 'ஐஓடி நைட் வாச்சர்' எனும் அந்த மிதியடியில் கால் வைத்த தும் அது கண்காணிக்கத் தொடங்கிவிடும்.
படுக்கைக்குப் பக்கத்திலோ, குளியலறை அல்லது சமையலறைக்கு முன்பாகவோ அதை வைப்பதன் மூலம் சேக ரிக்கப்படும் தரவுகளால் அதைப் பயன்படுத்துவரின் நடமாட்டம், பழக்கவழக்கங்கள் குறித்த ஒரு பிம்பத்தை உருவாக்க இயலும். அதிகமான முதியவர்கள் தனி யாக வசிப்பதாகவும் அவர்கள் பிறரது துணையின்றி தற்சார்புடன் வாழ விரும்புவதாகவும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி பொறி யியல் பள்ளியின் மூத்த விரிவுரை யாளர் டாக்டர் போ கோக் கியோங் தெரிவித்தார். "பிள்ளைகள் அல்லது பரா மரிப்புச் சேவையாளர்களாக, அவர்கள் நலமாக இருக்கிறார் களா என்பதை அறிந்துகொள்ள நாம் விரும்புவோம். அதே நேரம், அவர்களின் அன்றாட நடவடிக்கை களில் அதிகம் குறுக்கிடவும் நாம் விரும்புவதில்லை," என்றார் டாக்டர் கோ.