புக்கிட் பாஞ்சாங் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்திற்கான கட்டடத்தில், தரைத்தளத்திலுள்ள உணவங்காடியில் வாடிக்கையாளர்கள் பலர் வந்து சென்றாலும் அதிகம் பேர் மேல் தளத்திலுள்ள ஈரச்சந்தைக்குச் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. ஈரச்சந்தைக் கடைகளின் விற்பனை மூன்று ஆண்டுகளாக மந்தமாக இருக்கும் வேளையில் கடைக்காரர்கள் இங்கு தொடர்ந்து இருக்கப்போகிறார் களா என்பதை முடிவு செய்ய இவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் அமைந்துள்ள 28 கடைகளில் 21 குத்தகையாளர்கள் இருப்ப தாகவும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் இவர்களின் குத்தகைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் நிலையத்தை நிர் வகிக்கும் 'என்டியுசி ஃபுட்ஃபேர்' தெரிவித்தது. கடைக்கார்கள் இன்னும் நீண்ட குத்தகைக் காலத்திற்குச் சம்மதிப்பதற்கு முன்னர் தங்களது வியாபார வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்கு இந்த ஆறு மாத காலம் உதவியாக இருக்கும் என்பதை 'என்டியுசி ஃபுட்ஃபேர்' பேச்சாளர் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளில் தேசிய சுற்றுப்புற வாரியத்தால் கட்டப் பட்ட முதல் ஈரச்சந்தையாக இது உள்ளது.