சிங்கப்பூருக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்கும் இடையே சாலை வழியாகக் கடந்த வெள்ளிக் கிழமை பயணம் செய்தோர், கடு மையான போக்குவரத்தின் காரண மாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படு கிறது. இவ்வாறு காத்திருந்தோரில் சிலர், இந்தப் பிரச்சினை குறித்து குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத் தில் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். துவாஸ் இரண்டாம் இணைப் பில் போக்குவரத்து நெரிசலில் சிலர் சுமார் ஆறு மணி நேரம் சிக்கியிருந்ததாகத் தெரிவித்தனர். வேறு சிலர், நான்கு ஐந்து மணி நேரம் ஜோகூர் பாலத்தில் சிக்கி யதாகக் கூறினர். திருவாட்டி வின்னி எச். என் பவர் துவாஸ் இணைப்பில் எட்டு மணி நேரம் போக்குவரத்து நெரி சலில் சிக்கியதாகத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் துவாஸ் சாவடியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக அவர் கூறினார்.
போக்குவரத்து நெரிசலின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் துவாஸ் இரண்டாம் இணைப்பில் ஆறு மணி நேரம் வரை காத்திருந்ததாக சிலர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்