உடல்நலத்துடன் கூடிய முதியோருக்குப் போடப்படும் சளிக்காய்ச் சல் தடுப்பூசிகள், இளையோர் உடலில் ஏற்படுத்தும் அதே அள வுக்கு நோய்த் தடுப்பு ஆற்றலை முதியோர் உடலிலும் உண்டு பண்ணுகின்றன என்பது ஆய்வு ஒன்றின் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முதியவர்களைச் சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கலாம் என்பது இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு வெளி யிட்டு இருக்கும் தேசிய பெரிய வர்கள் நோய்த்தடுப்பு ஆற்றல் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை ஒட்டி இருப்பதாக நேற்று ஒரு கூட்டறிக்கை தெரி வித்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையும் 'ஏ*ஸ்டார்' அமைப்பின் சிங்கப்பூர் நோய்த் தடுப்பாற்றல் துறை கட்டமைப்பும் வெளியிட்ட அந்தக் கூட்டறிக்கை, இந்த இரு அமைப்புகளையும் சேர்ந்த அறி வியல் வல்லுநர்களும் மருந் தகப் பேராளார்களும் நடத்திய ஆய்வு விவரங்களைக் கொண் டிருந்தது. சளிக்காய்ச்சல் தடுப்பூசியை 65 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களுக்குப் போடலாம் என்று அமைச்சின் பரிந்துரைகள் தெரிவித்துள்ளன. முதியவர்களுக்குச் சளிக் காய்ச்சல் தடுப்பூசி போடுவதால் அவர்களின் உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்களை அத்தகைய நபர்களின் பலவீனங்கள் தடுப்ப தில்லை என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.