அழைப்பின் பேரில் வரும் பேருந்துச் சேவை ஏற்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்கான ஆறு மாத கால பரிசோதனை நடவடிக்கையை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்றுத் தொடங்கியது. அந்த ஏற்பாட்டிற்கு முதல் நாளன்று ஆக்ககரமான ஆதரவு கிட்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன்னை வந்து ஏற்றிச் செல்லும்படி பேருந்தை கைபேசிச் செயலி மூலம் பயணிகள் அழைக்க இந்தப் பரிசோதனை முறை வகை செய்கிறது. இந்த முறையைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவைத் தள மாகக் கொண்ட 'வாய டிரான்ஸ் போர்ட்டேஷன்' என்ற நிறுவனத் திற்கும் 'மினிஸ்டரி ஆஃப் மூவ் மண்ட்' என்ற உள்ளூர் நிறுவனத் திற்கும் $2.26 மில்லியன் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.
வாய நிறுவனம் 'பஸ்கோ' (BusGo) என்ற செயலியை உரு வாக்கியது. அது ஜு கூன் பகுதி யில் சோதிக்கப்படுகிறது. உள்ளூர் நிறுவனம் 'பஸ்நவ்' (BusNow) என்ற செயலிக்குப் பொறுப்பாக உள்ளது. இது மரினா டௌன்டவுன் பகுதியில் சோதிக்கப்படுகிறது. பயணத் தொலைவு எப்படி இருந்தாலும் கட்டணம் பெரியவர் களுக்கு 77 காசாக இருக்கும். அதை வழக்கமான பயண அட்டையைப் பயன்படுத்திச் செலுத்தலாம். இந்தச் சேவை பொது விடுமுறை நாட்கள் தவிர வார நாட்களில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கிடைக்கும். இந்தச் சேவையை ஒரு சில பயணிகளே பயன்படுத்தியதாகத் தெரிந்தது என்றாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இந்தச் சேவை வசதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
லோ சோங் கீ, 50, என்ற கப்பல் துறை முகவர் முதல் முதலாக 'பஸ் நவ்' என்ற செயலியைப் பயன்படுத்தி பேருந்தில் ஏறிச் சென்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்