அமெரிக்க நிலவரங்கள் காரண மாக சிங்கப்பூர் பங்குச்சந்தை நேற்று வீழ்ச்சி அடைந்தது. ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 1.43% குறைந்து 3,007.41 ஆக இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மத்திய வங்கியைக் குறைகூறிய சூழலில் பங்குச் சந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட் டது. அமெரிக்க மத்திய வங்கி திடீரென்று வட்டி விகிதத்தை ஏற்றுவதாக அதிபர் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக அமெரிக்க நிர்வாகம் ஓரளவுக்கு முடங்கிவிட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து முதலீட் டாளர்களிடம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
ஜப்பான் பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பெரும்பாலான பங்குகள் 20 மாதம் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண் டன. ஆஸ்திரேலியா, ஹாங்காங் பங்குச்சந்தைகளுக்கு நேற்று விடு முறை நாளாகும். சிங்கப்பூரில் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி வங்கிகளின் பங்குகள் 0.89% முதல் 1.35% வரை இறக் கம் கண்டன. தொழில்நுட்ப நிறு வனங்களின் பங்குகளின் விலை யும் இறங்கின. உலகளாவிய அளவில் எண் ணெய் விலை தொடர்ந்து குறை வாக இருந்து வருவதால் எண் ணெய் தொடர்புடைய நிறுவனங் களின் பங்குகளின் விலைகளும் இறங்கின.