வரவுசெலவுத் திட்டம்: பிப்ரவரி 18ல் நாடாளுமன்றத்தில் தாக்கல்

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் பிப்ரவரி 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2019 வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய் கிறார். அது நேரடியாக தொலைக்காட்சி யிலும் வானொலியிலும் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும். சிங்கப்பூர் பட்ஜெட் வலைத்தளத்தில் அதை நேரடியாகவும் காணலாம். அமைச் சர் திட்டத்தைத் தாக்கல் செய்த பிறகு முழு விவரங்களும் அந்த இணையத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்து இருக்கிறது. வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறக் கூடிய மிக முக்கியமான அறிவிப்புகள், இந்த அமைச்சின் ஃபேஸ்புக் பக்கத்திலும் டுவிட்டர் பக்கத்திலும் உடனுக்குடன் இடம்பெறும்.

வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் மக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்காக சென்ற ஆண்டு டிசம்பர் 3 முதல் நடந்து வரும் கலந்துரையாடல் கூட்டங்கள் ஜனவரி 11ல் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு தளங்கள் மூலமாக பொதுமக் கள் வரவுசெலவுத் திட்டம் பற்றிய தங் களுடைய கருத்துகள், யோசனைகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று அமைச்சு குறிப்பிட்டு உள்ளது. இந்த மாதம் பொதுமக்களின் கருத்து களைச் செவிமடுப்பதற்கான இரண்டு கூடங்களும் செயல்படும். நீ ஆன் பல துறை தொழிற்கல்லூரியில் மக்கான் பிளேசுக்கு வெளியே ஜனவரி 8ஆம் தேதி முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை ஒரு கூடம் செயல்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!