8வது மாடியிலிருந்து விழுந்து ஐந்து வயது சிறுவன் மரணம்

உட்லண்ட்ஸ் குளோசில் இருக் கும் அலுவலகம் ஒன்றில் தவறு தலாக வைத்து பூட்டப்பட்டுவிட்ட ஐந்து வயது சிறுவன் எட்டுமாடி உயரத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்துவிட்டான். இச்சம் பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. சன்னல் வழியாக அந்தச் சிறுவன் தப்பிக்க முயன்றபோது அவன் கீழே விழுந்துவிட்டதாக நம்பப்படுகிறது. எண் 11 உட்லண்ட்ஸ் குளோஸ் முகவரியில் இருக்கும் அந்த அலுவலகம் அந்தச் சிறு வனின் பெற்றோருக்குச் சொந்த மானது. சனிக்கிழமை இரவு 9 மணிக்குத் தங்களுக்கு இது பற்றி செய்தி கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.

வழக்கத்திற்கு மாறான இந்த மரணம் பற்றி போலிஸ் புலன் விசாரணை நடத்தி வருகிறது. மகனைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு பெற்றோர் தங்கள் அலுவலகத்திற்குச் சென்றதாகவும் அங்கு பையன் தூங்கிவிட்டதை அடுத்து மகனை மறந்தபடி அலுவலகத் தின் விளக்குகளை அணைத்து விட்டு கதவைப் பூட்டிவிட்டு பெற்றோர் அலுவலகத்தை விட்டு கிளம்பிவிட்டதாகவும் '‌ஷின் மின் டெய்லி' தெரிவித்தது. கார்பேட்டைக்குச் சென்ற போதுதான் அவர்களுக்கு மக னைப் பற்றிய நினைவு வந்தது. உடனடியாக அவர்கள் அலுவல கத்துக்கு விரைந்தார்கள். தரையில் மகனின் உடலை அவர்கள் கண்டார்கள். கீழே விழுந்து மரணம் அடைந்துவிட்ட சிறுவன், இந்தத் தம்பதியரின் நான்கு பிள்ளைகளில் கடைசிப் பிள்ளை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!