நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை அதிக ஊழியர்கள் நாடலாம்

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்திருக்கிறது. அமைச்சு இன்று வெளியிட்ட வேலை வாய்ப்பு நிலவர சுற்றுச்சூழலைக் காட்டும் அறிக்கையில் (Conditions of Employment Report) இந்தத் தகவல் இடம்பெறுகிறது.

நீக்குப்போக்கு உள்ள வேலை வாய்ப்புகளை முன்பைவிட இப்போது அதிகமான வேலையிடங்கள் வழங்குவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. பகுதி நேரமாக வேலை செய்வது, வீட்டில் இருந்து வேலை செய்வது உள்ளிட்ட ஏற்பாடுகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றை வழங்கும் நிறுவனங்களில் கடந்தாண்டு 72% ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த விகிதம் 2017ஆம் ஆண்டில் 70% ஆக இருந்தது.

ஆய்வறிக்கையில் இடம்பெறும் நிறுவனங்களில் 22.7% நிறுவனங்கள் குறைந்தது இரண்டு வகையான நீக்குப்போக்கான ஏற்பாடுகளை வழங்குகின்றன. 2017ஆம் ஆண்டில் இந்த விகிதம் 16.8% ஆக இருந்தது. இத்தகைய ஏற்பாடுகளை வழங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு அதிகம் என்று மனிதவள அமைச்சுக்கான துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!