லாரி ஓட்டுநருக்கும் மிதிவண்டி ஓட்டுநருக்கும் இடையே சென்ற டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் நேற்று இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. லாரி ஓட்டுநர் டியோ செங் டியொங், 57, மீது இரண்டு குற் றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பாசிர் ரிஸ் டிரைவ் 3ல் லாரியை ஓட்டிச்சென்றபோது, மிதிவண்டி ஓட்டுநர் எரிக் சியொங் ஹொயு, 35, வருவதைக் கவனிக்காமல் அவரை முந்திக்கொண்டு டியோ லாரியை ஓட்டினார்.
டியோ இவ்வாறு செய்ததால் வலத்தடத்தில் வந்துகொண்டிருந்த டாக்சி முன் லாரி சென்றது. உடனே லாரியை இடப்புறமாகத் திருப்பியதில் சியொங் மீது அது மோதியதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் விபத்து நடந்து 24 மணிநேரத்திற்குள் புகார் செய்யத் தவறியதற்காகவும் டியோ மீது குற் றம் சாட்டப்பட்டது. சியொங் மீதும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டன. சியொங் டியோவின் லாரி பக்கக்கண்ணாடியை உடைத்ததில் $15 மதிக்கத்தக்க சேதம் ஏற் பட்டது. சாலையின் இடது தடத் தின் நடுவே மிதிவண்டியை ஓட் டியதால் மற்ற வாகனங்களுக்கும் இடையூறாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.