கைகலப்பில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு

லாரி ஓட்டுநருக்கும் மிதிவண்டி ஓட்டுநருக்கும் இடையே சென்ற டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் நேற்று இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. லாரி ஓட்டுநர் டியோ செங் டியொங், 57, மீது இரண்டு குற் றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பாசிர் ரிஸ் டிரைவ் 3ல் லாரியை ஓட்டிச்சென்றபோது, மிதிவண்டி ஓட்டுநர் எரிக் சியொங் ஹொயு, 35, வருவதைக் கவனிக்காமல் அவரை முந்திக்கொண்டு டியோ லாரியை ஓட்டினார்.

டியோ இவ்வாறு செய்ததால் வலத்தடத்தில் வந்துகொண்டிருந்த டாக்சி முன் லாரி சென்றது. உடனே லாரியை இடப்புறமாகத் திருப்பியதில் சியொங் மீது அது மோதியதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் விபத்து நடந்து 24 மணிநேரத்திற்குள் புகார் செய்யத் தவறியதற்காகவும் டியோ மீது குற் றம் சாட்டப்பட்டது. சியொங் மீதும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டன. சியொங் டியோவின் லாரி பக்கக்கண்ணாடியை உடைத்ததில் $15 மதிக்கத்தக்க சேதம் ஏற் பட்டது. சாலையின் இடது தடத் தின் நடுவே மிதிவண்டியை ஓட் டியதால் மற்ற வாகனங்களுக்கும் இடையூறாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!