தங்கள் போதைப் பழக்கம் பற்றி தெரிவிக்கும் போதைப்புழங்கிகள் மீது இதர குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாது. மாறாக, எத்தனை முறை கைது செய்யப்பட்டாலும் அவர்கள் போதையர் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பப்பட்டு, போதைப் பழக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்குத் தகுந்த உதவி அளிக்கப்படும். இந்த மாற்றங்கள் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களால் சாத்தியமாகியுள்ளன. முன்பு, தீவிர போதைப்புழங்கிகள் மூன்றாவது முறை அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை பிடிபட்டால், 1998ல் அறிமுகமான நீண்ட கால சிறைத்தண்டனை திட்டத் தின் அடிப்படையில் அவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படும்.
இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் பற்றி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், போதைப்புழங்கிகளுக்கும் ஏனைய போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும் என்றார். போதைப்பொருளைச் சிறிய அளவில் உட்கொள்வோரும் போதைப்பொருள் உட்கொள்ள தேவையான பொருட்களை வைத் திருப்போரும் சிறிய அளவில் போதைப்பொருளை வைத்திருப் போரும் 'உண்மையான' போதைப் புழங்கிகளாக வகைப்படுத்தப் படுவர்.