குடித்துவிட்டு டாக்சி ஓட்டியவர் கைது

இருக்கை வார் அணியாததற்காக பிடிபட்ட டாக்சி ஓட்டுநர் சோதனைக்குப்பின் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இருக்கை வார் அணியாமல் பயணியுடன் டாக்சியை ஓட்டிச்சென்ற ஓட்டுநரைப் போக்குவரத்துப் போலிசார் கவனித்துவிட்டனர். சென்ற செவ்வாய்க்கிழமை காலை 8.37 மணிக்குச் சிம்ஸ் அவென்யூவில் 41 வயது ஓட்டுநரின் வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது ஓட்டுநர் மீது பலமான மது வாசனை அடித்தது. அவரை மேலும் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டது. இதன் தொடர்பில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். டாக்சி ஓட்டுநர்கள் பயணிகளை வைத்துக்கொண்டு இதுபோல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மிக அரிது என்று தேசிய டாக்சி மன்றத்தின் நிர்வாக ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங் ஹின் கீ ஷின்மின் நாளிதழிடம் தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!