சிங்கப்பூருக்கு மிகவும் பொருத்தமான அடுத்த தலைமுறை போர் விமானங்களாக அமெரிக்காவின் எஃப்=35 ரக போர் விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது. எஃப்=35 ரக போர் விமானங்களின் திறன்களை அறிந்து கொள்ளவும் எஃப்=16 ரக போர் விமானங்களுக்கு மாற்றாகப் பயன் படுத்த அதன் ஏற்றதுதானா என்பதை முடிவுசெய்வதற்கும் குறைந்த எண்ணிக்கையிலான எஃப்=35 ரக போர் விமானங்களை வாங்குவது பற்றி சிங்கப்பூர் குடியரசின் ஆகாயப்படை அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும். வரும் 2030க்குப் பின்னர் பயன்பாட்டில் இருக்க முடியாத எஃப்=16 ரக போர் விமானங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்த தங்களது தொழில்நுட்ப மதிப்பீடுகளை சிங்கப்பூர் குடியரசின் ஆகாயப்படையும் தற்காப்பு அறிவியல் தொழில்நுட்ப முகவையும் (டிஎஸ்டிஏ) முடித்துவிட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது. "எனினும், முழுமையான கொள்முதலை முடிவுசெய்வதற்கு முன்ன தாக, குறைந்த எண்ணிக்கை யிலான எஃப்=35 ரக போர் விமானங்களின் முழுமையான திறனையும் அது பொருத்தமானதுதானா என்பதையும் அறிந்து கொள்ள குடியரசின் ஆகாயப்படை முதலில் குறைந்த அளவில் அந்த விமானங்களை வாங்க வேண்டும்," என்று அந்த தொழில்நுட்ப மதிப்பீடு கூறியுள்ளது.
சிங்கப்பூருக்கு எஃப்-35ரக போர் விமானங்கள்
1 mins read