நாளை ஜனவரி 21ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு இன்று பிற்பகலே வேலைகள் தொடங்கிவிட்டன. தைப்பூசத்தன்று கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் அன்னதானத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக இன்றே அண்ணதானத்திற்குத் தேவையான காய்கறிகளை வெட்டும் பணி தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 75க்கும் அதிகமான தொண்டூழியர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கிட்டத்தட்ட 4 நேரம், வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைகோஸ், முருங்கைக்காய் போன்ற பலவகையான காய்கறிகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிங்கப்பூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு வந்து முருகக் கடவுளை வழிபடுவதுடன் மதிய உணவு நேரத்தில் வழங்கப்படும் அன்னதானத்திலும் கலந்துகொள்வது வழக்கம்.
தைப்பூசத் திருவிழா: 10,000 பேருக்கு உணவு
20 Jan 2019 21:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2019 21:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!