வடக்கு-தெற்கு பாதையில் சேவை தாமதம்

மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்தில் ஏற்பட்ட ரயில் பழுதால் இன்று காலை வடக்கு-தெற்கு ரயில் பாதையில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் பழுது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

இதனால் உட்லண்ட்ஸ் நிலையத்திற்கும் இயூ டி நிலையத்திற்கும் இடையிலான பயணங்கள 30 நிமிடங்கள் வரை கூடுதலாக நீடிக்கலாம் என்று எஸ்எம்ஆர்டி காலை 8 மணிக்கு டுவிட்டரில் தெரிவித்தது. சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்டோருக்காக உட்லண்ட்ஸ் நிலையத்திற்கும் இயூ டி நிலையத்திற்கும் இடையே இலவசப் பேருந்து சேவைகள் இயங்கும் என்றும் எஸ்எம்ஆர்டி கூறியது.

ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், ரயில் பழுது சீர்செய்யப்பட்டதாகவும் சேவைகள் கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்புவதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.

சேவை தாமதம் குறித்து சமூக ஊடகங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். தாமதத்தால் பல்வேறு ரயில் நிலையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!